வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் துர்முகி வருடத்துக்கான மகோற்சவம் கடந்த 31.01.2017 கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து நேற்றையதினம் சப்பறத்திருவிழா நடைபெற்றதுடன் இன்றைய தினம்(08.02.2017) வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றது.
முதலாம் குருக்குத்தெரு வீதி வழியாக பயணித்த தேர் வவுனியா மணிக்கூட்டுசந்தி , கந்தசுவாமி கோவில் வீதியுடாக ஆலயத்தினை வந்தடைந்தது.
இத் தேர்த்திருவிழாவில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தனர். மேளவாத்தியம் முழங்க பக்த அடியவர்கள் அரோகரா அரோகரா கூறியவாறு தேரினைப் பிடித்து இழுப்பதனை அவதானிக்க முடிந்தது.




































No comments:
Post a Comment